districts

img

எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் அளவீடு செய்து இடம் ஒதுக்குக

சென்னை, நவ. 23- எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் வியா பரம் செய்யும் இடத்திலேயே அளவீடு செய்து இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் சார் பில் சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் கட்டா தேஜா ரவியிடம் மனு  அளிக்கப்பட்டது. அந்த மனுவில், எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் 90க்கும் மேற்பட்ட வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளின்  வாழ்வாதா ரத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் அந்த இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அங்கு தற்போது வியாபாரம் செய்யக்கூடிய பகுதி   இல்லாமல் வியாபா ரம் செய்ய முடியும் என்பதை உறுதியளிக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் சம்பந் தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள் ளார். இதில் மாவட்டச் செய லாளர் டி.வெங்கட், நகர விற்பனைக் குழ உறுப்பினர் கள் கே.பலராமன், ஜி.மோனி ஷா, மாவட்ட துணைச் செய லாளர் அறிவழகன் எம்.சி.ரோடு வணிக வளாகம் சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கள் எஸ்.பவானி, எம்.ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.