கடலூர், அக்.16- கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் அனு தலைமை தாங்கினார். துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகர நல அலுவலர் எழில் மதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாள ராக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் வழங்கினார். இதில் தி.மு.க. மாண வர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.