districts

img

மே தினம்: புதுவையில் கோலாகல கொண்டாட்டம்

புதுச்சேரி,மே 1- மே தின கொடியேற்றுவிழா புதுச்சேரி முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 137 வது மே தினத்தையொட்டி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் புதுச்சேரியில் 137க்கும் மேற்பட்ட மையங்களில், 12 குழுக்களாக சென்று கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முதலியார்பேட்டையிலுள்ள சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் சங்கத்தின் மூத்த தலைவர் கே.முருகன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் என்.பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ராமசாமி, ரவிச்சந்திரன், கொளஞ்சியப்பன், ராஜ்குமார், மதிவாணன், ஜீவானந்தம், தினேஷ் குமார், கலியன், பச்சை முத்து, மணிமாறன், வடிவேல், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஞான பிரகாசம், மணவாளன், விஜயகுமார், வீரமணிகண்டன், சூரியன், சேவியர், காளிதாஸ்,நூர்முஹம்மது, துளசிங்கம், செந்தில்குமார், முருகன், குமரவேல், மற்றும் இணைக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குழுக்களாக சென்று கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மே தினத்தை கொண்டாடினார்கள்.

சிபிஎம் அலுவலகம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் கொடி ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், எம்.கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரணி

சிஐடியு,ஏஐடியுசி புதுச்சேரி மாநிலக் குழுக்கள் சார்பில் மே தின பொதுக் கூட்டம் சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலை வர் பிரபுராஜ், ஏஐடியு மாநிலத் தலை வர்  தினேஷ் பொன்னையா ஆகி யோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் ஆகியோர் மே தின உரையாற்றினர். முன்னதாக  அண்ணாசிலை எதிரிலி ருந்து துவங்கிய மே தின பேரணியில்  திரளான தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம்

புதுச்சேரி முல்லை நகரிலுள்ள அரசு ஊழியர் சம்மேளனத்தில் மே தினவிழா கொடியேற்றத்துடன் கொண்டாப் பட்டது. ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலை வரும் கல்வியாளருமான ஜெ.கிருஷ்ண மூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, “பறிக்கப்படும் தொழிற்சங்க உரிமைகள் அதனை மீட்டெடுக்க அணி திரள்வோம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது.  தொலைத்தொடர்பு அதிகாரி கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பால்கி பங்கேற்று உரை யாற்றினார். சம்மேளன கவுரவத் தலை வர் பிரேமதாசன், தலைவர் ரவிச் சந்திரன்,பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், நிர்வாகிகள் கீதா, பாலு உட்பட திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.