districts

img

மகப்பேறு பிரிவில் தொடரும் மரணங்களை தடுத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு

செங்கல்பட்டு, ஏப்.21- அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவுகளில் தொடரும்  மரணங்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில், கடந்த  வாரம்  உயிரிழந்த பிரமிளா குடும்பத்திற்கு நீதி  வழங்க வேண்டும், தவறான சிகிச்சை யளித்த  மருத்துவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கவேண்டும்,  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்,  பிரமிளாவின் குழந்தைக்கு பாதுகாப்பான உயர்தர சிகிச்சை வழங்கிடவேண்டும்,  மகப்பேறு பிரிவில் தொடர்ந்து நடைபெறும் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்,   மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் உபகரணங்கள்  உள்ளதா  என  மாவட்ட ஆட்சியர் ஆய்வு  நடத்திட  வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜெயந்தி வியாழனன்று (ஏப்.20) மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினார்.  அப்போது  சங்கத்தின் நிர்வாகிகள் தன லட்சுமி , சகாயமேரி ,  இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ், மத்தியக் குழு உறுப்பினர் பிரியங்கா,  உயிரிழந்த  பிரமிளாவின் கணவர்  ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.