புதுச்சேரி, மார்ச் 8- பெண்கள் பணிபுரிகின்ற இடங்களில் விசாகா புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 114வது சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில், சுதேசி பஞ்சாலை எதிரில் திறந்தவெளி கருத்தரங்கம் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ஜி.முனி யம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பா.ஹேமா, சகோதரர் அமைப்பின் தலைவர் சீத்தல்நாயக் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநில செய லாளர் இளவரசி,நிர்வாகிகள் சத்தியா, மாரிமுத்து,மலர்விழி,உமா சாந்தி, ஜானகி உட்பட திரளான பெண்கள் இதில் பங்கேற்றனர். தீர்மானம் அரசு மற்றும் தனியார் அலுவல கங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விசாகா புகார் கமிட்டிகளை புதுச்சேரி அரசு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் அதிகரித்து வரும் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்திற்கு எதிரான திறந்தவெளி நாடகம் மேடையில் அரங்கேற்றப்பட்டது.