districts

img

மக்களை அச்சுறுத்தும் கல்குவாரிகள்: தடை செய்ய மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ. 15- தேன்கனிக்கோட்டை, வட்டம் தண்டரை ஊராட்சிக்குட்பட்ட கொரட்ட கிரியில் சுமார் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர் கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் இரண்டு குவாரிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது  5 குவாரிகள் உட்பட 7 கிரசர்கள் கிராமத்தை சுற்றிலும் இயங்கி வரு கிறது. இதில் 5 குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்குவதாகக் கூறப்படு கிறது. இந்த குவாரிகள் கிரசர்களுக் காக மிகப் பெரும் இயந்திரங்களைக் கொண்டு மலைகளை தகர்ப்பதும், பாறைகளை உடைப்பதும் இரவு, பகல்  பாராமல் நடைபெறுகிறது. வெடி வைத்து தகர்க்கபடுவதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கிரசர்க ளில் இருந்து வெளியேறும் துகள்கள்  விவசாய பயிர்களில் படர்வதால்,  விளைச்சல் கடுமையாக பாதிக்கப் படுகிறது. தேன்கனிக்கோட்டை பிர தான சாலையில் இருந்து குவாரிக ளுக்கு செல்லும் டிப்பர் லாரிகள் ஊருக்குள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

இதுகுறித்து கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், ஊராட்சி நிர்வாகம், சாராட்சியர், வட்டாட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள், ஓசூர், தளி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், தண்டரை ஊராட்சி தலைவருக்கும் பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தி யும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு  முன்பு கிராம மக்கள் ஊரை காலி  செய்து சாராட்சியர் அலுவலகத்தில் குடியேறுவதற்காக நடை பயணமாக  புறப்பட்டனர். அவர்களை காவல்துறை யினர் தடுத்ததால் அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று கடந்த 5 நாட்களாக கொட்டகை அமைத்து அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் தலை மையில் செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், பிரகாஷ், வட்டச்  செயலாளர் வெங்கடேஷ், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகர், ராஜா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் லலிதா, நிர்வாகி நாகரத்தினம் ஆகியோர் போராடும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் ஜி.கே.நஞ்சுண்டன் கூறுகையில், கல்குவாரிகள் கிரசர்கள் இவைகளின் பாதிப்புகளுக்கு எதிராக ஊரை காலி செய்து மலை மீது  அமர்ந்து மக்கள் போராடி வருகிறார் கள். தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும், கனிமவளத்துறையும், மாசுக் கட்டுப்பாட்டு துறையும் உடனடியாக தலையிட்டு கல் குவாரிகள், கிரஷர்களை மூட நவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் மாசு படிந்து விளைச்சல் பாதித்துள்ளதை கணக் கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.