நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி சேகரிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக சைதாப்பேட்டை பன்னீர்செல்வம் நகர் மசூதியில் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ம.சித்ரகலா, ச.லெனின், டி.சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.