districts

img

சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சாரம்

புதுச்சேரி,ஜூலை 24-

     விவசாய தொழிலாளர்க ளுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    விவசாய தொழி லாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் கூலி ரூ.294 தொகையை ரூ.600 ஆக  உயர்த்த வேண்டும்  என்பது கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூலை 29 அன்று புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, பாகூரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

     விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயளாலர்  த. தமிழ்ச்செல்வன், பொருளாளர் தட்சிணா மூர்த்தி மாநில துணைச் செயலாளர் வ.ஹரிதாஸ், விநாயகர், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    முன்னதாக, சிபிஎம் பாகூர் கொம்யூன் செய லாளர் சரவணன், மண்ணாப் பட்டு செயலாளர் அன்பு மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.