தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நீதி கேட்டு ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து நடைபயணம் துவங்கியது. தர்மபுரி மாவட்டத் தலைவர் காவேரி தலைமை தாங்கினார். நடைபயணத்தை மாநிலத் துணைத் தலைவர் பழனியம்மாள் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நடராஜ், தலைவர் சந்திரன், பொருளாளர் தேவராஜன் ஆகியோர் பேசினர்.