districts

கீழ்தாடை மூட்டு அழற்சிநோயால் பாதிக்கப்பட்ட 2வயது குழந்தை மருத்துவமனையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை

சென்னை, ஜூலை 14

     கீழ்த்தாடை மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வாயை திறக்க முடியாமல் பேச முடியாமல் உணவை மெல்ல முடியாமல் தவித்த 2வயது சிறுமிக்கு சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தையின் தாடை மூட்டுகள் சிறப்பாக செயல்படுவதோடு தேவையற்ற திசுக்கள் அகற்றப்பட்டு வாயும் சரி செய்யப்பட்டுள்ளது.  மிகக்குறுகிய அளவில் வெறும் 3 மிமீ மட்டுமே சிறுமியின் வாய் திறந்த காரணத்தால் கீழ்த்தாடை மூட்டு அழற்சி நோய் இருப்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டதாக  மருத்துவமனையின் தலைமை மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கைலாஷ் கூறினார்.  

   இத்தகைய நோய் பொதுவாக 5 முதல் 15வயது வரையிலான குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அதிர்ச்சி அல்லது பிரசவத்தின் போது போர்செப்ஸ் கருவியை பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். எங்கள் மருத்துவனைகளில்  உள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் உயர்நிலை மருத்துவமுறை ஆகியவற்றின் காரணமாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 2வயது குழந்தைக்கு இதை செய்வது மிகவும் சவாலான ஒன்று என்று கூறிய அவர், குழந்தை தற்போது குணமடைந்து வருவதை பார்க்கையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் மருத்துவர் கைலாஷ் கூறினார்.