districts

img

ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு ஆணை

காஞ்சிபுரம், ஜூலை 8 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கட்டணம் இன்றி ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுத்துக் கொள்ளும் ஆணையினை விவசாயிகளுக்கு சிறுணை கிராமத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.  நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண் மற்றும் களிமண் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொழில் மேற்கொள்ள மண் எடுத்துக் கொள்ள நிபந்தனைகளுடன், இ-சேவை மையங்களில் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் திங்களன்று தமிழக முதல்வர் சென்னையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க 5 விவசாயிகளுக்கு ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கி பணிகளை துவக்கி வைத்தார். வண்டல் மண் எடுக்கும் ஏரியில் கரை அருகே இல்லாமல் உள் பகுதியில் எடுக்க அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை பல் துறையின் கீழ் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர் குறிப்பாக கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.