சென்னை,மே 7- தத்துவமேதை காரல்மார்க்ஸ் நினைவு தினத்தில் புத்தங்களோடு புழங்கு வோம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, தமுஎகச கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் புத்தக விற்பனை திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. மாமேதை காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, தத்துவவிளக்க புகைப்பட கண்காட்சியை சிபிஎம் மூத்த தலை வர் வே.மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார் கருத்துரையாற்றினார். புத்தகக்கண்காட்சியை நாடக வேந்தன் ஜி.மதுரை சேகர் திறந்து வைத்தார். சிபிஎம் கொளத்தூர் பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி தலைமை தாங்கினார். நிகழ்வில் இலங்கை ஓய்வு பெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான ந.ரவீந்திரன் சவுத் விஷன் வெளியிட்டில் எழுதிய சாதிச்சமூக வரலாற்றில் வர்க்க போராட்டம் நூலை வே.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டார். இதில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சமூகசெயல்பாட்டாளர் திருநங்கை ஜீவாநாயக், முனைவர் அ.பகத்சிங், அகிலஇந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் எம்.ராஜ்குமார், செயலாளர் வி.ஜானகிராமன், சவுத் விஷன் முதன்மை ஆசிரியர் நீதிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமுஎகச மாவட்டத்தலைவர் தளவை இராஜேந்திரன் மேதினக்கவிதை வாசித்தார். இதில் இடது சாரி புத்தகங்கள், காரல் மார்க்ஸின் உரு வச்சிலை மற்றும் அரிதான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த திருவிழா வில் பங்கேற்று ஏராளமான புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.