districts

img

திருபுவனை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப். 20- திருபுவனை கூட்டுறவு கடன் சங்கத்தின்  முறைகேட்டை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (செப்.20)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு விவசாய கடன் சேவை சங்கம் பி-34 ல் நடந்துள்ள முறைகேட்டில் ஈடுபட்ட வர்களை கூட்டுறவுத்துறை கைது செய்ய வேண்டும்.விவசாய கூட்டுறவு கடன் சங்கத்தின் ரூ. 56 லட்சத்து 52 ஆயிரத்தி 601 தொகையை ஊழல் செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மானிய விலையில் விவ சாயிகளுக்கு வழங்கப்படும் உரம், தனி யார் நிறுவனத்துக்கு லாரி லாரியாக விற்று மோசடி செய்பவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. திருபுவனை கடை வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார். சிபிஎம்  புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம்   உரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், சிபிஎம் கொம்யூன் செயலாளர் இரகு. அன்புமணி, விதொ நிர்வாகி தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் முத்து, ராமச்சந்திரன், பாலச்சந்தர்,அருள் உட்பட திரளான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.