சென்னை, ஜூலை 4- மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதி மன்றம் மறுத்து விட்டது. கடந்த 2020-2021 ஆம் கல்வி யாண்டில் மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாண வர் சேர்க்கை நடத்தப்பட்ட தாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ் குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாத வர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்து வக் கல்வி இயக்குனரக அதிகாரி களுக்கும் தனியார் கல்லூரி களுக்கும் இடையிலான சதி யின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார், கல்லூரிகள் வசூ லித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபி சிஐடி காவல்துறையிக்கு உத்தர விட்டிருந்தது. அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வ ராஜன் தான் காரணம் . அவர் தனது அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த முறை கேட்டில் தொடர்புடைய அடை யாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதி ராகவும், சம்பந்தப்பட்ட துறையின ருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து செல்வ ராஜன் தாக்கல் செய்த மேல் முறை யீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதி பதி பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. செல்வ ராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், கல்லூரிகள்தான் அதிக கட்ட ணம் வசூலித்தன, ஆனால் தேர்வுக் குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அப்போது நீதிபதிகள், “அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலை யில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு இரண்டு கலந்தாய்வு நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கில் திங்களன்று (ஜூலை 4) தீர்ப்பு வழங்கிய நீதிபதி கள், மருத்துவ மேற்படிப்பு மாண வர் சேர்க்கையில் நடைபெற்ற முறை கேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். தேர்வு குழு முன்னாள் செய லாளர் செல்வராஜன் மீதான சிபிசிஐடி விசாரணையை தொடர லாம் எனவும் அவருடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்தனர். மேலும், அவர் மீதான துறை ரீதியான விசார ணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.