districts

img

நலச்சங்க படிவம் வழங்காததை கண்டித்து பணிப்பெண்கள் முற்றுகை

புதுச்சேரி, பிப்.13- வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நலச்சங்க படிவம் வழங்காததை கண்டித்து  முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், கடைஊழியர்கள், தையல் கலைஞர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என 30க்கும் மேற்பட்ட தொழில் செய்பர் களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு திட்டபலன்களை பெற்று வருகின்றனர். எனவே வீட்டு வேலை செய்யும் பெண்களையும் நலச்சங்கத்தில் உறுப்பி னர்களாக சேர்த்து அவர்களுக்கு உரிய திட்ட பயன்கள் வழங்க வேண்டும் என சிஐடியு தொடர்ந்து போராட்டம் நடத்தி யது. அதன்படி அதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டு வீட்டுவேலை செய்யும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வரு கின்றனர். முற்றுகை போராட்டம் வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்களை உறுப்பினர்களாக சேர்க்க கோரி கடற்கரை அருகே உள்ள அமைப்பு சார நலச்சங்க அலுவலகத்தில் செவ்வாய் கிழமை விண்ணப்படிவம் கேட்டுள்ளனர். அப்போது விண்ணப்பபடிவத்தை வழங்கா மல் பெண்களை அலைகழித்துள்ளனர். இதை அறிந்த சிஐடியு மாநில நிர்வாகி கள் சீனுவாசன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன், மதிவாணன், தாட்சாயினி உட்பட திரளான பெண்கள் நலச்சங்க அலு வலகத்தை செவ்வாயன்று (பிப்-13) முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தி னர். இதை அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி னர். அப்போது வீட்டுவேலை செய்யும் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்கப்படு வார்கள் என்று உறுதி அளித்து, அதற்கான படிவத்தை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.