districts

பருவ தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

செங்கல்பட்டு, ஆக.29- சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவத் தேர்வின் மதிப்பெண் சான்றி தழ் வழங்காததால் செங்கல்பட்டு அரசு  கலைக்கல்லூரி மாணவர்கள் மேல்படிப்புக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு நகரத்தில் இராஜேஸ்வரி  வேதாசலம் அரசு கலைக்கல்லூரி  கடந்த 1970 ம் ஆண்டு  துவங்கபட்டு செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம்,  வரலாறு, அரசியல் அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை, பிஎஸ்சி இயற்பியல்,வேதியியல், கணிதம், விலங்கியல், கணினி அறிவி யல், பிசிஏ கணினி பயன்பாடு ஆகிய இளங்கலை படிப்புகளும், முதுகலை எம்ஏ தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆராய்ச்சி பட்டம், முனைவர் பட்டப்  படிப்புகளும் உள்ளது. இக்கல்லூரி யில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர பேராசிரியர்களும், 15 க்கும் மேற்பட்ட தற்காலிக பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரில் செயல்பட்டுவரும் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இக்கல்லூரி யில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட வட்டங்களைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சார்ந்த மாண வர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் கல்வி  பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த  இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பருவத் தேர்வுகளின் மதிப்பெண்  சான்றிதழ் இன்று வரை வழங்கப்படா மல் உள்ளது.  இதனால் மூன்றாம் ஆண்டு முடித்த மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு சில துறை மாணவர்களுக்கு மட்டும் மூன்றாண்டுகளுக்க பதிலாக  இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே  மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட் டுள்ளது.

சான்றிதழ் குளறுபடி...

தற்போது வழங்கியுள்ள ஒரு சில துறை மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களிலும் பல்வேறு குளறு படிகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 6 பருவத்திற்கு  வழங்க வேண்டிய மதிப்பெண் சான்றி தழுக்கு பதிலாக 4 பருவத்திற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட் டுள்ளது. அதிலும் வழங்கப்பட்ட 4 சான்றிதழ்களில் மாணவியின் புகைப்படம் தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால்  அந்த சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சான்றிதழ்களை வைத்து உயர் படிப்பு படிக்க செல்ல  முடியவில்லை என்றும் கல்லூரி யில் முறையிட்டால் பல்கலை கழகத்தில்தான் சென்று கேட்க வேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.  பல்கலைக்கழகம் செய்த தவறுக்கு நான் பணம் மற்றும் நேரத்தை விரை யம் செய்து சென்னைக்கு சென்று அலைந்து மீண்டும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு  தலையிட்டு பல்கலைக்கழகம் செய்த தவறுகளை சரி செய்து கொடுப்பதும் கொடுக்காமல் வைத்துள்ள மீதமுள்ள மதிப்பெண் சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர்.