சென்னை, ஜூன் 14 -
தற்காலிக பணி நீக்கத்தை கண்டித்து மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஊழியர்கள் புத னன்று (ஜூன் 14) மருத்துவ மனை முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் மறுத்து வருகிறது. ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது.
இது குறித்து மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் எம்ப்ளா யீஸ் யூனியன் (சிஐடியு) தொழிற்தாவா எழுப்பி யுள்ளது. தொழிலாளர் துறை முன்பு சமரச பேச்சு வார்த்தைக்கு வராமல் நிர்வாகம் புறக்கணித்து வருகிறது.
மேலும், ஊழியர்களிடம் இருந்து சட்டவிரோதமாக ரூ2 ஆயிரம் பிடித்தம் செய் துள்ளது. பொய் காரணங் களை கூறி ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் போன்றவற்றை வைத்து மிரட்டி வருகிறது. சங்க த்தின் பொதுச் செயலா ளரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, அகவிலைப்படி போன்ற வற்றிலும் நிர்வாகம் அலட்சி யம் காட்டுகிறது. இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, சங்கத்தின் தலை வர் ஆர்.ரமேஷ் சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.