மதுராந்தகம், ஆக.26- மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கிராமங் களுக்கு பேருந்துகள் இயக்கபட்டுவருகின்றது. இந்த நிலையில் மதுராந்தகம் நகரத்தில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலைய கட்டடத்தை இடித்து புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி புதியதாக பேருந்து நிலையம் கட்டடம் கட்டுவதற்கு சுமார் ரூ2.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்த பணி கடந்த செப்டம்பரில் கோரப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன. பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையின் புறவழிச் சாலையில் மதுராந்தகம் நுழைவாயிலின் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்கா லிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது செயல்படும் பேருந்து நிலை யத்தில் மேற்கூரை ஏதும் அமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச கழிப்பறை யின் கழிவுநீர் அனைத்தும் திறந்தவெளியில் விடப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது மட்டுமன்றி கழிவறையில் இருந்து செல்லும் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் இந்த இடத்தின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப் படும் தண்ணீரை குடிப்பதற்கு தண்ணிற்காக பெயர் அளவுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்கு சில மாதங்கள் ஆகும்நிலையில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் நிலையுள்ளதால் கழிவறை களை சரியாக பராமரிப்பதுடன் அந்த கழிவறை யிலிருந்து வெளியேறும் கழிவுநீர்களை உரிய வகையில் அப்புறப்படுத்தவேண்டும். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டடத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியுடன் நவீன முறையில் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- க.பார்த்திபன்