districts

img

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் - எம்.வீரபத்திரன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் வரலாற் றில் முக்கியமான நிகழ்வுகள் நடந்த மாவட்ட மாகும். 1760 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் வந்த வாசியில் போர் நடை பெற்றது. இதில் ஆங்கிலேய படைகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. இந்தியநாடு அவர்களின் ஆளுகையின் கீழ்  கொண்டு வருவதற்கான பாதையை வகுத்தது. இந்த மாவட்ட மண்ணில்தான் 1806 ஆம் ஆண்டு ஜூலை  10ஆம் தேதியில் வேலூர் கோட்டையில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளை தாக்கி, வேலூர் கோட்டை யில் பறந்த ஜாக் கொடியை இறக்கி திப்பு சுல்தானின் கொடியை பறக்கவிட்டனர். சில மணி நேரங்களில் ஆங்கிலேயர்களின் எதிர் நடவடிக்கையால் இந்திய சிப்பாய்கள் சுமார் 1000 பேர் வீரமரணம் அடைந்தனர். வேலூர் கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட் டுக்குள் வந்தது. இதுவே, 1857 ஆம் ஆண்டு  வட இந்தியாவில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகமாகும்.   இரண்டு உருண்டை  சோறு கூலி உயர்வு தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் திருவண்ணாமலையில் தலைமறை வாக இருந்தபோது, அவரின் வழிகாட்டு தல் பேரில், அண்ணாமலையார் சாமியை மாடவீதியில் தூக்கிச் செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரு உருண்டை சோறுக்கு பதில்  இரண்டு உருண்டை சோறு கூலியாக உயர்த்திக் கேட்டு மாடவீதியில் சாமி சிலையை தூக்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்அவர்கள் கோரிக்கையை அண்ணா மலையார் ஆலய நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இந்த போராட்டத்திற்குயார் காரணம் என்று உளவுத்துறை, தலைமறைவாக இருந்த எம்.ஆர். வெங்கட்ராமனை தேடினர். 1952 ஆம் ஆண்டில் ராஜாஜி முதல்வராக இருந்த போழுது சாத்தனூரில் அணை கட்ட வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தது கம்யூனிஸ்ட்களே.  1989 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் உதயமானது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழுவும் அமைக்க ப்பட்டது பஞ்சமி நில மீட்பு மாநாடு, தீண் டாமை ஒழிப்பு மாநாடு, இளங்குன்னி ஆலய நுழைவுப் போராட்டம், வீட்டுமனை பட்டா, வீடு , இருளர் பழங்குடியின மக்கள், விவசாயி களுடைய நலன் காக்கும் போராட்டங்கள், ஆரணி பட்டு நெசவாளர்கள்  தொழிலை பாது காக்கும் போராட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த கோருதல் உள்பட தொடர்ச்சியாக  மாவட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக சிபிஎம் பாடுபட்டு வருகிறது.