districts

img

காலிப்பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்

சென்னை, ஆக. 31 - மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டுநிரப்ப முன்னு ரிமை அளிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சரஸ்வதி வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வியாழனன்று (ஆக.31) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 123ஆவது வார்டு உறுப்பி னர் எம்.சரஸ்வதி பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தை வர வேற்கிறோம்.

மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளி களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும். கடந்த மாதம் எழுப்பிய கேள்வி களின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பெரியார் சாலை யில் உள்ள கால்வாய்கள் இரண்டு முறை தூர்வாரப் பட்ட பிறகும் வெள்ளம் தேங்குகிறது. எந்திரங்கள் மூலம் வெள்ளம் அகற்றப் படுகிறது. எனவே, நிதி ஒதுக்கி அந்த சாலையை மேம்படுத்த வேண்டும். வார்டு உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் இடங்களில் வேகத்தடைகளை (ஸ்பீடு பிரேக்கர்) அமைக்க வேண்டும். முதலமைச்சர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறி வித்துள்ளார். அதன்படி மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டு கள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். தேனாம்பேட்டை சாலை களில் உள்ள மின்பெட்டிகள் பாதுகாப்பின்றி தரையில் உள்ளது. மழைக்காலம் தொடங்கி விட்டது. அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு, பில்லர் எழுப்பி அதன் மீது மின்பெட்டிகளை வைக்க வேண்டும். சக்திமான் வாகனம் பற்றாக்குறை உள்ளது. நிதி நிலை அறிக்கையில் அறி வித்தப்படி, சக்தி மான் வாகனம் வாங்கப் பட்டுள்ளதா? வார்டுக்கு ரூ10 லட்சம் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. பணி களை மேற்கொள்ள இந்த தொகை போதுமானதல்ல. எனவே, கூடுதல் தொகை வழங்க வேண்டும். வாரிய குடியிருப்புகளில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற, குழாய்களை மாற்றி அமைக்க வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிதி ஒதுக்குவதில்லை. எனவே அந்தப் பணிகளையும் மாநகராட்சியே செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.

98ஆவது வார்டு உதவி பொறியாளரை மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் பிரியதர்ஷினி தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். அதனை மாநக ராட்சி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலை யங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, தரமான சிகிச்சை வழங்க வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் முன்பெல்லாம் மாந கராட்சியே சாலை அமைக்கும். தற்போது அந்தச் சாலைகளை அமைக்க முடியாத நிலை உள்ளது. வாரிய குடி யிருப்பு பகுதிகளில் மாநக ராட்சியே சாலை அமைக்க உத்தரவிட வேண்டும். 4ஆவது வார்டில், ஜோதி நகர் 4 மற்றும் 8ஆவது தெருக்களில் 6 மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ் மனு அளித்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் பேசி னார். இதற்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் அடிக்கடி மழை வருகிறது. ஒரு மணி நேரத்தில் 4 செ.மீ. மழை பெய்துவிடுகிறது. வெள்ளத்தை அகற்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்க வேண்டி உள்ளது. தண்ணீர் எங்கும் தேங்காத வகையில் உடனுக்குடன் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். கவுன்சிலர்கள் குறிப்பிடும் பணிகளை அதி காரிகள் விரைந்து செய்ய வேண்டும்; தரமாக செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் பங்களிப்பு இல்லாமல் வெள்ளத்தை சமாளிக்க முடியாது என்பதை அதி காரிகள் உணர்ந்து, இணைந்து செயல்பட வேண்டும் என்றார். பணிச்சுமை இருந்தா லும் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அதி காரிகள் போனை எடுக்க வேண்டும். ரூ 50 லட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்தும் லிமிடெட் டெண்டர் விடலாம். எனவே, அதிகாரிகள் சட்ட விதிகளை பின்பற்றி பணி களை விரைந்து தரமாக செய்யுங்கள் என்றும் அறி வுறுத்தினார். மேயர் ஆர்.பிரியா குறிப்பிடுகையில், வாரிய வீடுகள் அமைந்துள்ள பகுதி களில் அடிப்படை வசதி களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.