districts

img

குறைந்தபட்ச சட்டக்கூலி அமல்படுத்தகோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஜூலை 22 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் திங்களன்று (ஜூலை 22) ஊரக உள்ளாட்சி மாவட்ட தலைவர் ஆ. தவராஜ் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊரக உள்ளாட்சி மாவட்ட நிர்வாகிகள் சி.கோதண்டபாணி, ஜி. ஹேமாவதி, என். குணசேகரன், சி. வெங்க டேசன், எம். குப்பன், ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் பி. மணி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர். மணி கண்டன், விதொச மாவட்ட  தலைவர் டி. சந்திரன், வாலாஜா பொது தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் வ.வேலு, செ.செந்தில் உள்ளிட்ட ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் ஊராட்சி ஓஎச் டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச சட்டக்கூலி அமல்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தில் அவுட்சோர்சிங் மற்றும் தனியார்மய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.