வேலூர். ஏப். 17 - வேலூர் நறுவீ மருத்துவமனை யில் கல்லீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்த இரண்டு நோயாளி களுக்கு ஒரே வாரத்தில் கல்லீ ரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ள னர். இதுகுறித்து மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரை சேர்ந்த ஸ்மிதா (24) என்ற பெண் பல ஆண்டு களாக கல்லீரல் செயலிழந்து அவதியுற்று வந்த நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டு கல்லீ ரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நலம் பெற்றுள்ளார். அவ ருக்கு அவரது தாயார் ராஜாத்தி கல்லீரல் தானம் செய்தார். அதேபோல் வேலூர் சத்து வாச்சாரி பகுதியை சேர்ந்த ரவீந்தி ரன் (63) என்பவருக்கு அவரது மனைவி சாந்தி கல்லீரல் தானம் செய்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் இரு வரும் நலமுடன் உள்ளனர். மேலும் மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பல்வேறு நோயாளிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இங்கிலாந்து, நியூசி லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, சூடான், மாலத்தீவு கள், மியான்மர், வங்காளம், பூட்டான் உள்ளிட்ட வெளிநாடு களிலிருந்தும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா, கேரளா, தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலிருந்து வந்த 70 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நோயாளி களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகி யோர் உடனிருந்தனர்.