சென்னை, ஏப். 11- 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்ட தாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் தற்கொலைகள் அதிக அள வில் பெருகியுள்ள நிலையில், தென் மாநிலங்களில் தான் அதன் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. மேலும், 30 வயதுக்குட்பட்ட வர்கள் இடையே தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. தமிழ்நாட்டில், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021இல் தற்கொலைகள் 26 சதவிகிதம் அதி கரித்துள்ளது. அதாவது, 12,659 தற்கொலை மரணங்கள் நேர்ந்துள்ளன.
சினேகாவின் 37 ஆண்டுகள்
தற்கொலைகளை தடுக்க பாடுபடும் சினேகா அமைப்பு இந்தாண்டு 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1986இல் தொடங்கப்பட்ட சினேகா சுமார் பத்துலட்சத்திற்கும் அதிகமான நபர்க ளுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை தன்னார்வலர்களை கொண்டு இலவசமாக வழங்கியுள்ளது. ஆன்லைன் ’சாட்’ சேவை அறிமுகம் இந்நிலையில் பெரும் மன உளைச்ச லுக்கு ஆளாகும் இளைஞர்களுக்கு உதவு வதற்காக சினேகா தற்போது ஆன்லைன் ’சாட்’ உதவியை அறிமுகப்படுத்துகிறது. இளைஞர்களிடையே ஆன்லைன் ’சாட்’ என்பது பிரபலமான தகவல்தொடர்பு வடிவமாக இருப்பதால், அவர்களுடைய தேவைக்கு ஏற்ப இந்த வசதியை அறிமுகப்படுத்துவதாக சினேகா நிர்வாகி லட்சுமி விஜயகுமார் தெரிவித்தார்.