districts

img

வேட்டவலம் அருகே பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய தடையால் பதற்றம்

திருவண்ணாமலை,ஜூன்18-

     திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இதில் 250-க்கும் மேற்பட்ட பொது பிரிவின ரும், 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 100 ஆண்டு கள் பழமைவாய்ந்த மாரி யம்மன் கோயில் உள்ளது.

    இங்கு பொதுப்பிரி வினர் மட்டும் வழிபாடு செய்வார்கள். அதேபோல் பட்டியலின மக்கள் வழிப்பாடு செய்ய அவர்க ளுக்கென தனியாக காளியம்மன் கோவிலும் உள்ளது.

    இந்நிலையில் மாரி யம்மன் கோவிலில் பட்டி யலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் பதி விட்டுள்ளனர். இந்த பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.  இதற்கு பொது பிரிவினர் சமூக வலைத்தளம் மூல மாகவே எதிர்ப்பு தெரி வித்து வந்தனர். இளை ஞர்கள்தங்கள் கருத்துகளை பதிவிட்டதால், இருத்தரப் பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.  

    இந்நிலையில் சனிக்கிழ மையன்று இருத்தரப்பின ரும் நேரில் சந்தித்த னர். அப்போது இளை ஞர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியதில், ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில் பாதிக்கப்பட்ட தங்க ராசு என்பவர் திரு வண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிர கலநாதன், எஸ்.ராம தாஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணா மலை, ச.குமரன் ஆகி யோர் நேரில் சந்தித்து, சம்பவம் குறித்து விசா ரணை நடத்தி னர்.  இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில்   பதட்டமான சூழல் நிலவி யது.  மேலும் அங்கு அசம்பா விதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.