ராணிப்பேட்டை, நவ. 23 – ராணிப்பேட்டையில் நலத்துறை விடுதிகளில் தங்கி பயின்று வரும் 10, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாண வர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு ஆட்சியர் வாழ்க்கை வழிகாட்டி கையேடு வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் சுகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் கவிதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், திறன் பயிற்சி நிறுவனத்தினர் யுவராஜ் பாண்டி யன், விமல் சர்மா, தன்னார்வ பயிலும் வட்ட வெற்றியா ளர் ரேவதி, பேராசிரியர்கள் யோக சித்ரா, வளர்மதி, விரிவுரை யாளர் ஓம் நிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.