districts

img

பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் 4ஆம் பிரிவு பெண் ஊழியர்களை இணைத்திடுக

சென்னை, செப். 30 - பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் 3 மற்றும் 4ஆம் பிரிவு பெண் ஊழியர்களை இணைக்க வேண்டும் என்று எல்ஐசி மகளிர் மாநாடு வலியுறுத்தி உள்ளது. எல்ஐசி உழைக்கும் மகளிர் 26ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (செப்.30) எல்எல்ஏ கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாதவிடாய் நிற்கும் நேரத்தில் விடுப்பு, குழந்தை வளர்ப்பு கால விடுப்பு, அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு தனி ஓய்வு அறை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எல்ஐசி  உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மய மாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்,  தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் 1995 ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள வர்களுக்கு 14 விழுக்காடு பங்களிப்பை எல்ஐசி செலுத்த வேண்டும், ஏஐஐஇஏ-விற்கு கூட்டுபேர உரிமை வழங்க வேண்டும், பிரீமியம் மற்றும் சேவை கள் மீது ஜிஎஸ்டி விதிக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் தீக்கதிர் சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன், பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், நிர்வாகி எஸ்.கோபிநாதன், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் எஸ்.மஞ்சுளா, நிர்வாகிகள் விஜயலட்சுமி, புவனேஸ்வரி சிவக்குமார், எஸ்.சண்முக வேலம்மாள் மற்றும் சென்னை கோட்டம்-2ன் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கே.துளசி உள்ளிட்டோர் பேசினர்.