சென்னை, ஜன.25- இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் பங்கு வர்த்தகம், கடன் பாத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகை யில் எல்.ஐ.சி. எம்.எஃப். பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய நிதி திட்டத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடு கள், கடன் மற்றும் பணச் சந்தை முதலீடுகள் மற்றும் தங்க பரிமாற்ற ஃபண்ட்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வ தன் மூலம் நீண்ட கால மூலதன வளர்ச்சியை ஏற்படுத்து வதே இத்திட்டத்தின் முதலீட்டு நோக்கமாகும் என்று அந் நிறு வனம் கூறியுள்ளது. இத்திட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் விற்பனை மற்றும் முதலீட்டிற்கு மீண்டும் இத்திட்டம் திறக்கப்படும் என்று எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மேலாண்மை லிமிடெடின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதி காரியுமான ஆர்.கே. ஜா கூறினார். “பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதியங்கள் தற்போது அதிகமாக பிரபலமாகி வரு கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.