districts

img

முதல்வர் திறந்து வைத்த நூலகக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

சிதம்பரம்,பிப்.26-  ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அரசு  செயல்பட்டு  பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நூலகங்களை அமைத்து வருகிறது. சிதம்பரம் நகரத்தில் கடந்த 1955 ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று காசு கடைத்தெருவில் தனியார் கட்டிடத்தில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து மழை காலங்க ளில் நூல்களை பாதுகாக்க முடியாத நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு  சின்ன காஜியார் தெருவில் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.  2014 ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அதே நேரத்தில் சிபிஎம் நகர மன்றத் தலைவராக பௌசியா பேகம் இருந்த போது நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான  4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவச மாக அனைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.  இந்நிலையில் கிளை நூலகம், சிதம்பரம் வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில்  நூலகம் கட்ட  நிதி ஒதுக்கீடு செய்யாததால்  நூலகம் கட்ட முடியாமல் இருந்து வந்தது.   கடந்த 2021-22 ஆம் ஆண்டு சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய  நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதி வணிகர்கள் , நகை வியா பாரிகள் , பொதுநல அமைப்புகளை ஒருங்கி ணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம்  திரட்டி னார் .  இதனை தொடர்ந்து  திமுக ஆட்சி பொறுப்பேற்று நூலகம் கட்ட ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ 32  லட்சம் மானிய மாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ. 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது.  பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 5 அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயி லாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனை யொட்டி நூலகத்திற்கான சாவியை ஜனவரி 11 அன்று சம்பந்தப்பட்ட நூலக துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நூலகத்தை மாற்றவில்லை. இதனால் தற்போது அரசு பணியாளர் தேர்வு நேரத்தில் மாணவர்கள் இடமின்றி மிகவும் சிரமத்தில் படித்து வருகின்றனர். புதிய நூலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்து அதை மாற்றுவதற்கு ஏன் காலதாமதம் ஏற்படுகிறது இதற்கு முதல்வர்தான் தலையிடவேண்டுமா? என வாசகர்களின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து நூலகத்திற்கு தினமும் வருகை தந்து அரசு பணியாளர் தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இடநெருக்கடி உள்ளதால் படிப்பதற்கான சூழல் இல்லாத நிலை உள்ளது. அங்குள்ள ஊழியர்கள் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். தேர்வு நேரங்களில் விடுமுறை இல்லா மல் நூலகத்தை திறந்து வைக்கிறார்கள். இந்த கட்டிடம் 4 ஆயிரம் ச.அடியில் இயங்குகிறது. 1 லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து வகை நூல்கள் உள்ளது. தற்போது நடைபெறும் தேர்வுக்கான ஏற்றவாறு புத்தகங்கள் நூலகத்தில் வைக்க வேண்டும்.  ஆனால் புதிதாக கட்டியுள்ள நூலக தரைதளம் 1800 ச.அடியில் மட்டுமே  உள்ளது. அங்கு புத்தகம் வைக்க முடி யாத நிலை உள்ளது. எனவே உடனடியாக அரசு அந்த இடத்தில் முதல் தளம் அமைத்து கொடுத்த பணியாளர் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும், வாசகர்கள் அமைதியான முறையில் அமர்ந்து படிக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.   இதுகுறித்து நூலகத்துறை நூலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய இடத்தில் இடவசதி பற்றாத நிலையில் கட்டிடத்தின் முகப்பில் தற்காலிகமாக அனைவரும் அமர்ந்து படிக்க தகர கொட்டகை போடப் பட்டுள்ளது. மேல்தளம் கட்டுவதற்கு அரசின் அனுமதி கோர பட்டுள்ளதாகவும் நிதி கிடைத்தவுடன் கட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும் என நூலகத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.