சென்னை, பிப்.13 - ஒன்றுபட்டு இணைந்து செயலாற்றி உள்ளாட்சி களை கைப்பற்றுவோம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறினார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் 148ஆவது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எஸ்.வெள்ளைச்சாமியும், 149ஆவது வட்டத்தில் திமுக வேட்பாளராக செல்வி ரமேசும் போட்டியிடுகின்ற னர். இவர்களை ஆதரித்து ஞாயிறன்று (பிப்.13) மேட்டுக்குப்பம் பகுதியில் டி.ஆர்.பாலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கண்ணும் காது மாக இருந்து செயல்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே, விருப்பு வெறுப்பு களை மறந்து ஒன்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறு வோம். கடந்த தேர்தல்களை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். பணிகளில் விலகி நின்று வாக்கு வித்தி யாசத்தை குறைப்பது திமுக தலைமைக்கு செய்யும் துரோகம். எனவே, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சார கூட்டத் தில், சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், அ.பாக்கியம், திமுக 148 வது வட்டச் செய லாளர் எம்.கே.கமலக் கண்ணன், 149 வது வட்ட செயலாளர் மதியழகன் அவைத்தலைவர் எம்.டி.தயாளன், பகுதி துணைச் செயலாளர் ரமேஷ் ராஜ், பகுதி பிரதிநிதி அரசி ராஜேந்திரன், மாய கிருஷ்ணன், இராமையா, வடிவேலு, சுரேஷ், காங்கி ரஸ் வட்ட தலைவர் சரவ ணன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் வட்ட தலைவர் வேடியப்பன், வனரோஜா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுர வாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.