சென்னை, மே 15-
போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரசு வாகன பதி வெண் பலகையில் (அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதை ஆதாரமாக வைத்து சம்பந்தப் பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு தற்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து காவல்துறை தெரி வித்துள்ளது.