சென்னை, அக். 6 - மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக நிற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். அண்ணாநகர் பகுதி 11வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.ராம கிருஷ்ணன், “வகுப்புவாதம் போராட வேண்டிய மக்களை பிளவுப்படுத்துகிறது. மக்களின் மத உணர்வை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மதிக்கிறது. அதை பாதுகாக்க உறுதியோடு போராடுகிறது. அதேசமயம் மதத்தை அரசியலில் பயன்படுத்த அனு மதிக்க மாட்டோம். மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்போம்” என்றார். “மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, தேச ஒற்றுமையை காப்போம். ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை, முத லாளித்துவ- இந்துத்துவா கூட்டை எதிர்த்து முறியடிப்போம்” என்று குறிப்பிட்ட அவர், “காஞ்சிபுரத்தில் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாக சென்னையில் போராட்டம் நடத்தி னால் அனுமதி மறுத்து கைது செய்கிறார்கள். திமுக மக்கள் விரோத கொள்கையை அமல்படுத்தினால் எதிர்த்து மகத்தான போராட்டத்தை சிபிஎம் நடத்தும்”பாஜகவை வீழ்த்த திமுகவுடன் இணைந்து நிற்போம். என்றும் அவர் கூறினார். இந்த மாநாட்டில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.