districts

img

தமுஎகசவின் நூல்களைக் கொண்டாடுவோம்

திருவண்ணாமலை, ஜுன் 25- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கூடல்  நிகழ்வு  கிளை தலைவர் பழனி தலை மையில் நடைபெற்றது. பெரணமல்லூர் சேகரன்  எழுதிய “மீட்டாத வீணையும்  மீட்கும் கீதங்களும்” என்னும் சிறுகதை நூலுக்கான மதிப்புரையை கவிஞர் பூங்குயில் சிவக்குமார் வழங்கினார். மாவட்டத் தலைவர் கவிஞர் முத்து வேலன் வாழ்த்துரை வழங்கி னார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் மஞ்சுளா, மணிவண்ணன், கவிஞர்கள் கௌசல்யா, தமிழ் ராசா ஆகியோர் பாடல்களை இசைத்தும் கவிதைகளை வாசித்தும் காட்டினர். எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் ஏற்புரை வழங்கி னார். முன்னதாக கிளை செய லாளர் தங்கமணி வரவேற் புரை நிகழ்த்தினார். தங்க மணி நன்றி கூறினார்.