விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட சிந்தாமணி கிராம சமுதாய மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.செங்கமல செல்வன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி எஸ்.விஜயகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் முதல் நிலை நிர்வாக உதவியாளர் கே.சீதாலட்சுமி, வழக்கறிஞர் வி.கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.