ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து இடதுசாரிகட்சிகளின் சார்பில் வாணியம்பாடி எல்ஐசி அலுவலகம் முன்பு திங்களன்று (மே30 ) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் அர்ஜுனன், வாணியம்பாடி தாலுகா செயலாளர் எம்.இந்துமதி , சிபிஐ மாவட்ட குழு நிர்வாகி இரா.முல்லை, நகர செயலாளர் ஜாகிர் உசேன், தொழிலாளர் வெல்பர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வாசீம் சர்தார்,முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.