districts

img

தோழர் வின்னி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை,ஜன.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் வின்னியின் உடல் சிபிஎம் மற்றும் வெகுஜன இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலியுடன் சனிக்கிழமை யன்று (ஜன.28) தகனம் செய்யப்பட்டது. சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு அலுவலகக் கிளை உறுப்பினரும் பெரம்பூரில் மூத்த உறுப்பினர் கணேசனின் மகளுமான தோழர் வின்னி வியாழனன்று (ஜன. 26) அகால மரணமடைந்தார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், அ.விஜயகுமார், ஆர்.லோகநாதன், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார், எல்.பி.சரவணதமிழன், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.செல்வராஜ், கோட்டிஸ்வரி, கமலநாதன், எஸ்.பவானி, ஹேமாவதி, வீ.ஆனந்தன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, கி.ராதை (மாற்றுத்திறனாளி சங்கம்), பி.என்.உண்ணி (சிஐடியு) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அவரது உடல் சனிக்கிழமையன்று  பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

;