வேலூர், ஏப். 29 - இளைஞர்களும் மாணவர்களும் இரா.செழியனின் வரலாற்றை முழுமையாக படிக்க வேண்டும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் தலைவர்கள் தெரிவித்தனர். வேலூர் விஐடி பல்கலைக் கழகம், நாவலர் செழியன் அறக்கட்டளை சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் நூற்றாண்டு விழா விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சங்கர் விசு வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரங்க சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்த ‘இரா.செழியனின் மக்களுக்கான நாடாளுமன்றம்’ என்ற நூலை விஐடிவேந்தர் ஜி.விசு வநாதன் வெளியிட, முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே பெற்றுக்கொண்டார். டி.ராஜா - டி.கே.ரங்கராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், பத்திரிகை யாளர் கி.வைத்தியநாதன், நீலா குழந்தைவேலு, விமலா சுப்பையா, அமெரிக்க மருத்துவர்கள் ஜானகி ராமன், சம்பந்தம் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக வேந்தர் ஜி.விசு வநாதன் தமது தலைமை உரையில், “விஐடி பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் நாவலர் நெடுஞ்செழியன். இப்போது வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 மையங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்” என்றார். ஆற்காடு ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியாருக்கு பிறகு புகழ் பெற்ற சகோதரர்களாக விளங்கியவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், இரா.செழியன் என்றும் அவர் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு விஐடி பல்கலைக்கழகத்தில் இரா.செழியனுக்கு கவுரவ பேராசிரியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. அதிலிருந்து அவர் தனது இறுதி காலம் வரை விஐடியில் தான் இருந்தார். தன் வாழ்நாள் முழுதும் நேர்மையை கடைபிடித்தார். நாடாளுமன்றத்தில் அவருடைய வாதத்திறமை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும் என்றும் புகழாரம் சூட்டினார். உலகத் தமிழர் பேரமைப்பு தலை வர் பழ.நெடுமாறன் பேசுகையில், “நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. இப்போது அவ ருடைய இளவல் இரா.செழி யனுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இருவரும் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்து வதில் சிறந்தவர்கள். நாவலர் நெடுஞ்செழியன் சட்டமன்றத்தில் ஜன நாயக மரபுகளை நிலை நிறுத்தினார். அவை முன்னவராக திகழ்ந்தார். சபை மரபுகளை காத்தவர். மற்ற வர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். இரா.செழியன் நாடாளு மன்ற மரபுகளை நிலை நிறுத்தியவர்” என்றும் கூறினார். இரா.செழியன் நூற்றாண்டு விழா வில் கட்சியை கடந்து, அரசியலைக் கடந்து அத்தனை பேரும் இங்கு திரண்டுள்ளோம். இந்த பெருமை அனைவருக்கும் கிடைக்காது. அவர் மக்களுக்கு செய்த தொண்டால் தான் இந்த பெருமை கிடைத்தது. நாட்டு மக்களுக்கு அளப்பரிய பணிகளை செய்தவர். ஆளுங்கட்சியினர் மட்டு மல்லாமல் எதிர்க்கட்சியினரும் போற்றும் வகையில் அவருடைய பணி இருந்தது. எனவே, இளை ஞர்களும் மாணவர்களும் செழியன் வரலாற்றை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.