districts

img

சட்டத்தை மதிக்காத மாநகராட்சி நிர்வாகம்

வேலூர். ஏப் 24 - வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்திலுள்ள கடை களில் மாற்றுத்தி திறனாளிக ளுக்கு 5 விழுக்காடு கடைகள் ஒதுக்கக் கோரி கடந்த ஆண்டு முதல் பல முறை மாவட்ட ஆட்சி யருக்கு கடிதம் கொடுத்தும் சட்டத்தை மதிக்காமல் ஒரே ஒரு கடை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இதனை கண்டித்தும் சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் உரிய இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டிது  தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் வேலூர்  மாவட்டக் வேலூர் மாநகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து மாவட்டத்தலைவர் கே.கோவிந்த ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் கே.ெஜ.சீனிவாசன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கோபால.ராசேந்திரன், எஸ்.டி.சங்கரி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். மாநிலத் தலைவர் டி.வில்சன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து  பேசினார்.  மாவட்டப் பொருளாளர்  குருமூர்த்தி, நிர்வாகிகள் வீர பாண்டியன் சுகுமார் தீபன் சக்கர வர்த்தி, ஜோஸ்வா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.