ராணிப்பேட்டை, ஜன. 29 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், பெருமாந்தாங்கல் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் வசிப்பதற்கு வீடின்றி மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தலைவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தை சார்ந்த 4 குடும்பங்களுக்கு பட்டா வழங்க கலவை வட்டாட்சியர் சுரேஷ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, புதனன்று (ஜன. 29) கலவை வட்டம், தென் மணப்பாக்கம் கிராமத்தில் கொடுத்த இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிலம் நில அளவையர் மோகன் அளவீடு செய்து இடம் வழங்கினார். அப்போது, சிபிஎம் கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு, வி.தொ.ச மாவட்டப் பொருளாளர் எஸ். வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.