districts

அரசு பேருந்துகளில் பயணிக்க லட்சம் பேர் முன்பதிவு

சென்னை,அக்.13- தீபாவளியை முன்னிட்டு இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு கடைசி மூன்று தினங்களுக்கு முன்பு  தான் முன்பதிவு எண் ணிக்கை என்பது அதிகரிக் கும், ஆனால் இந்த முறை 20,21,22 ஆகிய தேதிகளில் மேலும் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார்  1  லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்ப ரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் கடைசி நேர முன்பதிவு மையம் 20ம் தேதி திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.