districts

img

சென்னை முக்கிய செய்திகள்

குருவிமலை நரிக்குறவர் 152 பேருக்கு சாதிச் சான்று 

காஞ்சிபுரம், ஜூலை 4 - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வேடல் குருவிமலை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் பழங்குடியின மாணவ , மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் 152 பேருக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பல்வேறு நிலைகளில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த வேடல் பகுதியில் 90 நபர்களுக்கும், குருவிமலைப் பகுதியில் வசிக்கும் 62 நபர்களுக்கும் ஜாதி சான்றிதழை புதனன்று (ஜூலை3) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி நேரில் வழங்கி வாழ்த்தினார்.

கடலூரில் 3 சவரன் செயின் பறிப்பு

கடலூர், ஜூலை 4-  கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பட்டா பிராமன் மனைவி சாந்தி  (வயது 46) இவர் புதன் கிழமை அந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு நடந்து வந்து  கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சாந்தி கழுத்தில்  அணிந்திருந்த 20கிராம் தங்கச் செயினை பறித்துக்  கொண்டு தப்பி ஓடினர்.  இதை பார்த்த சாந்தி கூச் சலிட்டார் அக்கம் பக்கத்தி னர் வருவதற்குள் மர்மநபர் கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதே போல திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நத்தவெளி சாலையில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடி விட்டு தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று கொண் டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் சிறுமி கழுத்தில் அணிந் திருந்த 4கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

காஞ்சிபுரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது!

காஞ்சிபுரம், ஜூலை 4 — காஞ்சிபுரம் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்  செய்தது தொடர்பாக சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவஇரக்கம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வெங்கடேசன்பாளையம் சேர்ந்த 14 வயது சிறுமி காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ  சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு வாரம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்துள்ளார். அப்போது சிஎஸ்ஐ சர்ச்சில் பாதிரியாராக வேலை செய்யும் தேவஇரக்கம் என்பவர் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி  இரவு சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதுகுறித்து வெங்கடேச பாளையம் பொதுமக்கள் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த  நிலையில் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்த நிலையில் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது  போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு  நீதிமன்றத்திற்கு  ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்த னர். பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தங்கம்: சவரனுக்கு ரூ.520 உயர்வு

சென்னை, ஜூலை 4- தங்கம் விலை மாத தொடக்க நாளான ஜூலை 1-ந்தேதி  உயராத நிலையில் அதற்கு அடுத்த நாட்களில் சற்று உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் வியாழனன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520  உயர்ந்து 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது.  தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 6 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

சரும,கேச பராமரிப்பு தயாரிப்புகள் அறிமுகம்

 சென்னை, ஜூலை 4- வாடிக்கையாளருக்கு நேரடி சேவை வழங்கும் D2C பர்சனல் கேர் தளத்தில் இந்தியாவில் புதிய நிறுவன மாக கால்பதித்திருக்கும் யுனிக் புரோ சயின்ஸ், சரும மற்றும் கேசப் பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. பொடுகு பிரச்சனையை சரி செய்யவும் மற்றும் எரிச்சல் பாதிப்புள்ள உச்சந்தலைக்கு நிவாரணம் அளிக்கவும் திறன் கொண்டவையாக திகழும் ஜப்பானிய கமேலியா மற்றும் ஜிசிபஸ் ஜோசிரோ மரப்பட்டையின் சாரம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஷாம்பூவையும் அந்நிறுவ னம் அறிமுகம் செய்திருக் கிறது. இந்த ஷாம்பூ, உச்சந்தலையில் அரிப்பை தடுப்பதோடு பொடுகு மற்றும் செதில்கள் போல உருவாகும் படிவுகளை குறைக்கும் என்று அந்நிறு வனம் கூறுகிறது.