திருவள்ளூர், டிச.20- உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி - சென்னை செல்லும் மார்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத் தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணூர் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலை யங்களுக்கு இடையே வெள்ளியன்று (டிச 20), காலை கும்மிடிப்பூண்டி செல்லும் வழி தடத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை யிலிருந்து கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரயில்கள் எண்ணூர், கத்தி வாக்கம், திருவொற்றியூர் ரயில் நிலை யங்களில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன. சென்னையில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அறுந்து விழுந்த மின் கம்பியை சீர மைக்கும் பணியில் 50 கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடு பட்டனர். ரயில் சேவை பாதிக்கப்பட் டதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள், அலுவலகம் செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயா ளிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 4 வழிப்பாதை பாதையாக அமைக்க வேண்டுகோள் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க் கத்தில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கும் வகையில் 2 வழி தடங்கள் மட்டுமே இருப்பதால் மாற்றுப் பாதை யில் ரயில்களை இயக்க முடியா மல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விரைந்து கும்மிடிப் பூண்டி சென்னை மார்க்கத்தை முழுமை யாக 4 வழி பாதையாக மாற்றிட வேண்டும். குறித்த நேரத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும், என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைத்ததை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.