திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து புழல் அடுத்த சண்முகபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார். இதில் காங்கிரஸ் மாவட்டச்செயலாளர் ஆர்.எம்.தாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், த.கு.வெங்கடேஷ் வேம்புலி (சிபிஐ), சா.இளங்கோவன் (விசிக), டி.சி.ராஜேந்திரன் (மதிமுக), வீ.ஆனந்தன், வி.கமலநாதன் (சிபிஎம்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.