districts

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி,ஜூலை, 24-

      அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் அண்ணாஜி நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜேம்ஸ் ஆஞ்சல மேரி தலைமை தாங்கினார்.

    போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் டி.எம்.ராதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.மாநில துணைத் தலைவர் ஜி.ராணி துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஏ. ராதிகா நிறைவுரையாற்றினார்.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், வாலிபர் சங்க நிர்வாகி நவீனா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

   நந்திஸ் சுவாதி, கிட்டம்பட்டி உள்ளிட்ட ஆணவ படுகொலைகளில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.

    ஆந்திர காவல்துறையினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான புளியாண்டப்பட்டி குறவன் இன பெண்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும்.  குற்றச்செயலில் ஈடுபட்ட ஆந்திர காவல்துறையினர் மீதும் குற்றத்திற்கு  துணை போன கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மீதும் தமிழ்நாடு அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

நிர்வாகிகள்

    சங்கத்தின் மாவட்டத் தலைவராக சரஸ்வதி, மாவட்டச் செயலாளராக டி.எம்.ராதா, பொருளாளராக ரவிதா,துணைச் செயலாளராக கவிமணி தேவி, துணைத் தலைவராக சுசீலா தேர்வு செய்யப்பட்டனர்.