districts

கிருஷ்ணகிரி வெடி விபத்து கோவை மண்டலம் ஐ.ஜி ஆய்வு

கிருஷ்ணகிரி, ஆக.2-

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29 ஆம் தேதி பட்டாசு குடோனில் வெடி விபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால் தான் இந்த விபத்து நடந்தது  என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து  குறித்து கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து மக்களவையில் விவாதம் நடந்தது. இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு  மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் புதன்கிழமை  (ஆக.2) கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழைய பேட்டையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி சென்று பார்த்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம்  ஐ.ஜி. விசாரணை நடத்தினார். அப்போது  அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். இதேபோன்று சென்னையில் இருந்து தடய அறிவியல் துறை இயக்குநர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குநர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடி  விபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு வந்து பார்வை யிட்டனர்.

    அப்போது அவர்கள் வெடிவிபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.