districts

img

சிதம்பரம் நகராட்சித் தலைவராக கே.ஆர்.செந்தில்குமார் பதவியேற்றார்

சிதம்பரம், மார்ச் 4- சிதம்பரம் நகராட்சியில் நகர மன்றத் தலைவருக்கான தேர்தலில் 14ஆவது வார்டில் திமுகவை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.ஆர் செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத தால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்ப ட்டதாக அறிவிக்கப்பட்டு நகரா ட்சி ஆணையர் அஜிதா பிரவின் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் 5ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க ப்பட்டு நகராட்சி ஆணை யர்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் கிள்ளை பேரூராட்சி தலைவராக திமுக சார்பில் 10ஆவது வார்டில் வெற்றிபெற்ற மல்லிகாவும், துணைத்தலைவராக கிள்ளை ரவிந்திரனும் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டனர். பரங்கிப்பேட்டையில் திமுக சார்பில் 11ஆவது வார்டில் வெற்றிபெற்ற தேன்மொழி தலைவராகவும், துணைத்தலைவராக முகமது யூனுசும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுக்கொண்டனர்.