சென்னை, பிப்.4- கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்தினை நவீனப்படுத்தி, மேம்படுத்திட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழு மத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு தலை மையில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலு வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கோயம் பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை மேம்படுத்திடும் வகை யில் திடக்கழிவு மேலாண் மைப் பணிகளை நவீன மயமாக்குதல், போக்கு வரத்து நெரிசல் மற்றும் இடையூறினை களைந்து, சீரான போக்கு வரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்தல், வளாகப் பகுதி யில் உலவிடும் கால்நடை களால் ஏற்படும் பிரச்சினை களை சென்னை மாநக ராட்சியுடன் இணைந்து சரி செய்தல். ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்து தல்,வளாகத்தில் அமைந்து உள்ள புறக் காவல் நிலையத்தை சீர மைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நட வடிக்கை மேற் கொள்ளுதல் போன்றவை குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை கமிஷ னர் சங்கர் ஷிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் காவல் ஆணையர் டி.எஸ். அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.