districts

img

கொண்டங்கி ஏரியை பாதுகாக்கவேண்டும்

கடலூர், ஜன.23- கடலூரில் உள்ள கொண்டங்கி மற்றும் மேல் ஏரிகள் பசுமை தீர்ப்பாயத்தால் பாது காக்கப்பட்ட நீர் நிலையாக வரையறுக்கப் பட்டுள்ளது.  இந்த நிலையில், இந்த ஏரிகளை சுற்றி பேருந்து நிலையம், பல்லடுக்கு மாடி கட்டிடம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, கடலூர் நகரில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டியும் கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், ஆலோ சகர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ச.சிவராமன், டி.புருஷோத்தமன், ஏ.ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இணைப்பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவ நாதன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.