districts

img

இழப்பீடு தராமல் பாலத்திற்காக வீடுகளை இடிக்க முயற்சிப்பதா?

சென்னை,டிச.14- மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக இழப்பீடு ஏதும் வழங்காமல் வீடுகளை இடிக்க முயற்சிப்பதற்கு சென்னை கொளத்தூர் தொகுதிகுட்பட்ட ஒளவை நகர மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் ஐசிஎப் பகுதியில் இருந்து  ஜிகேஎம் காலனியை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்திற்காக ஒளவை நகரில் அடையா ளம் செய்யப்பட்ட இடம் வழங்கப்பட்டுள்ளது. சாலை யின் இருபுறத்திலும் 10அடி இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோதவில்லை என்று கூறி தற்போது சென்னை மாந கராட்சி இரவோடு இர வாக நோட்டீஸ் கொடுத்து ஒளவை நகர் முதல் தெரு வில்  ஒட்டு மொத்த குடியிருப் புகளை இடிக்கும் வேலையை தொடங்கி யுள்ளது.  இந்த  தெருவில்  60 வீடுக ளில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 80 ஆண்டுகளாக வசித்து வருகின்றன.  சர்க்கார் புறம்போக்கு பெரு மாள் தாங்கல் உள் வாய் பகுதியாக அறிவிக்கப் பட்டிருந்த இந்த இடம்  தற்போது சர்க்கார் புறம்  போக்கு நீர்நிலை பகுதி  என அறிவித்து ஆக்கிர மிப்புகளை அகற்றுவதாக மாநகராட்சி கூறுகிறது.

எந்தவிதமான இழப்பீடும் நிவாரணமும் அறிவிக்கா மல்  7 நாட்களுக்குள் காலி  செய்ய வேண்டும் என்று  நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது.  கல்வி ஆண்டு முடிவடை யாத சூழலில் ஆக்கிரமிப்பு களை அகற்றக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்த ரவு உள்ளது.  ஆனால் எந்த  விதிமுறைகளையும் பின்பற் றாமல்  வீடுகளை அகற்றும் பணி நடைபெறுவதால்  மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தமிழ அரசு  மேம்பாலம் கட்ட தேவை யான இடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு  பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களின் வீடுகளை பாதுகாக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதிக்குழு கேட்டுக்கொண் டுள்ளது. முன் அறிவிப்பின்றி இடிக்கப்பட்ட இடங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களை கட்சியின் கொளத்தூர் பகுதி  செயலாளர் ஹேம வதி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.