சென்னை, ஜூன் 24 -
அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மை பாட்டி வீடு உள்ளிட்ட பள்ளிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் சரண்யாவின் 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ளது. இதனால், சிட்கோ நகரில் உள்ள ‘மை பாட்டி வீடு’ என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைகளை கை கால்களை கட்டி சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பள்ளி உரிமை யாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சியிடம் சரண்யா கேட்டுள்ளார். அதற்கு முறையாக பதிலளிக்காத மீனாட்சி, சரண்யாவை ஆபாசமாக பேசி மிரட்டி யுள்ளார்.
இதனையடுத்து சரண்யா வில்லி வாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, மீனாட்சியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மழலையர் பள்ளி கடந்த 10 ஆண்டு களாக அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக இந்த பள்ளியை மூட வேண்டும். சென்னையில் அரசு அங்கீகாரம் பெறாமல் நடைபெறும் பள்ளிகளைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சரண்யாவிற்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.