கிருஷ்ணகிரி,மார்ச் 4- பள்ளி மாணவிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை ஓசூர் காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவரது பெரியப்பா வின் சிறுநீரகம் தானமாக பெறப் பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரது பெரியப்பாவிற்கும் வெவ்வேறு ரத்தவகை என்பது தெரியவந்தது. தமிழக அரசிடம் உரிய ஆவணங்கள் அனுமதி பெற்று கடந்த பிப்.22 அன்று இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்.சாய் சமீரா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேஷ் தலைமையிலான குழு மூலம் பரிசோதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. காவேரி மருத்துவ மனை இயக்குநர் விஜயபாஸ்கர் மருத்துவர் குழு உடன் இருந்தார். பொருத்தப்பட்ட சிறு நீரகமானது உடனடி யாக செயல்பட தொடங்கியது. ஒரு வார முடிவில் மாணவி வீடு திரும்பினார். கொடையாளியான அவரது பெரியப்பா 5 நாட்களில் வீடு திரும்பி அன்றாட வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் பெரு நகரங்களில் மட்டுமே நடக்கும் நிலை மாறி ஓசூர் போன்ற சிறு நகரங்களிலும் செய்யமுடியும் என்பதை காவேரி மருத்துவமனை சாதித்து காட்டியுள்ளது என மருத்துவர்கள் சாய் சமீரா, வெங்கடேஷ் பெருமையுடன் கூறினர்.